ஆவின் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ. 3 உயர்வு

ஆவின் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ. 3 உயர்த்தப்படுவதாக பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் அறிவித்துள்ளது.
ஆவின் நிறுவனத்தின் சார்பாக தினந்தோறும் 4.20 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் மூலமாக சராசரியாக 40 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு, அதில் 30 லட்சம் லிட்டர் பால் தமிழ்நாடு முழுவதும் தினசரி நுகர்வோருக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
19-08-2019 முதல் பசும்பாலானது லிட்டர் ஒன்றுக்கு ரூ.32ஆகவும், எருமைப்பாலானது லிட்டருக்கு ரூ.41ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. கடந்த 16-05-2021 அன்று பாலின் விலை லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில், பசும்பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ. 32 லிருந்து ரூ.35 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. எருமைப்பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.41லிருந்து ரூ.44ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு நவம்பர் 5 முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.