நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாணவர்களுக்கு ஜாலி நியூஸ்!

கனமழை காரணமாக, சென்னையில் நாளை ஒரு நாள் மட்டும், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், வடகிழக்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. தலைநகர் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில், கடந்த சில நாட்களாக, கனமழை பெய்து வருகிறது.

சென்னையில் இன்று பிற்பகல் தொடங்கிய கனமழை, இரவு வரை பெய்து வருகிறது. கோடம்பாக்கம், கிண்டி, நுங்கம்பாக்கம், தியாகராய நகர், மந்தவெளி, மயிலாப்பூர், ராஜா அண்ணாமலை புரம், அசோக் நகர், நந்தனம், தேனாம்பேட்டை, ஆழ்வார்பேட்டை உள்ளிட்ட இடங்களில், பிற்பகல் முதல் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், சென்னையில் கனமழை காரணமாக, நாளை ஒரு நாள் (நவம்பர் 4 ஆம் தேதி) மட்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இந்தத் தகவலை சென்னை மாவட்ட ஆட்சியர் அமிர்த ஜோதி தெரிவித்து உள்ளார்.

சென்னையை ஒட்டி உள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் விடுமுறை அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, கனமழை காரணமாக, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அடுத்த 2 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, சென்னையில் ஓரிரு இடங்களில் அடுத்த 2 மணி நேரத்துக்கு இடியுடன் கூடிய கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.