தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதி: நேரில் நலம் விசாரித்த ஸ்டாலின்!

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மனைவியும், முதல்வர் ஸ்டாலினின் தாயாருமான தயாளு அம்மாள், வயது முதிர்வு காரணமாக ஏற்பட்டுள்ள உடல் நலக்குறைவு காரணமாக சென்னை கோபாலபுரம் இல்லத்திலேயே சிகிச்சை பெற்று வந்தார்.

உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவப் பரிசோதனைக்காகவும் சிகிச்சைக்காகவும் அவ்வப்போது மருத்துவமனைக்கும் சென்று வருகிறார். அந்த வகையில், முதல்வர் ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள், திடீர் உடல் குறைவு காரணமாக சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தாயார் தயாளு அம்மாள் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கு சென்ற முதல்வர் ஸ்டாலின், அவரது உடல்நிலை குறித்து நலம் விசாரித்தார். அத்துடன், அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் தொடர்பாக மருத்துவர்களிடமும் அவர் கேட்டறிந்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.