அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ் – மாநில அரசு சூப்பர் அறிவிப்பு!

டெல்லியில், காற்று மாசு காரணமாக, அரசு ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணிபுரியலாம் என, அம்மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் தெரிவித்து உள்ளார்.

தலைநகர் டெல்லியில், காற்றின் தரம் மிகவும் மோசமடைந்து காணப்படுகிறது. டெல்லி மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகை மற்றும் தேவையற்ற பயிர்களை விவசாயிகள் தீயிட்டு கொளுத்துவதாலும் காற்றின் தரம் மாசடைவதாகக் கூறப்படுகிறது.

காற்று மாசுபாடு காரணமாக இணை நோயுடைய முதியவர்கள், குழந்தைகள் என பலரும் பெரிதும் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், 10-ல் 8 குழந்தைகள் சுவாசக் கோளாறு காரணமாக மருத்துவமனைக்கு வருவதாக குழந்தைகள் நல டெல்லி மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.

இந்நிலையில், டெல்லி சுகாதாரத் துறை அமைச்சர் கோபால் ராய் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

காற்று மாசு காரணமாக, பாதுகாப்பு நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு, டெல்லி அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களில், 50 சதவீத பேர் வீட்டில் இருந்து பணிபுரிய அனுமதி அளிக்கப்படுகிறது. இதே நடைமுறையை தனியார் நிறுவனங்களும் தங்களது ஊழியர்களுக்கு வழங்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

டெல்லியில், ஹாட்ஸ்பாட்களில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த சிறப்பு பணிக்குழுக்கள் அமைக்கப்படும். டெல்லியில் மாசு எதிர்ப்பு கட்டுப்பாடுகளை செயல்படுத்துவதை கண்காணிக்க ஏற்கனவே ஆறு பேர் கொண்ட குழுவை அரசு அமைத்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய ஆம் ஆத்மி கட்சித் தலைவரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால், “காற்று மாசு காரணமாக, 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது,” என தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.