தொண்டர்களை ஒருங்கிணைத்து அதிமுகவை மேலும் வலுப்படுத்த வேண்டும்: ஓ. பன்னீர்செல்வம் பேட்டி

மதுரை: தொண்டர்களை ஒருங்கிணைத்து அதிமுகவை மேலும் வலுப்படுத்த வேண்டும் என ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார். முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இன்று மதுரை நிருபர்களுக்கு பேட்டியளித்தார். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை தொண்டர்களின் இயக்கமாக உருவாக்கினார்.

அவரது வழியில் புரட்சித்தலைவி அம்மாவும் இந்த இயக்கத்தை தொண்டர்களின் இயக்கமாக யாரும் வெல்ல முடியாத இயக்கமாக வடுவாக வளர்த்தார். வலிமையான அ.தி.மு.க. என்ற இயக்கத்தை 50 ஆண்டுகளாக வளர்த்து வலிமையான இயக்கமாக இருபெரும் தலைவர்களும் தொண்டர்கள் கையில் தந்துள்ளனர்.

அ.தி.மு.க.வில் உள்ள அனைத்து தொண்டர்களும் ஒருங்கிணைந்து மேலும் இந்த இயக்கத்தை வலுப்படுத்த வேண்டும் என விரும்புகிறேன் என்று கூறினார். கவர்னரின் செயல்பாடு எப்படி உள்ளது என்று நிருபர்கள் கேள்வி விடுத்தனர்.

இதற்கு பதிலளித்த ஓ. பன்னீர்செல்வம் கவர்னரை பற்றி தற்போது கருத்து கூறுவது ஏற்புடையது அல்ல என்றும், தமிழகம் வரும் பிரதமரை சந்திக்க வாய்ப்பு உள்ளதா? என்ற கேள்விக்கு பிரதமர் தமிழகம் வருவது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. அப்படி அவர் வந்தால் சந்திப்பேன் என்று தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.