இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,016 பேருக்கு கொரோனா; 3 பேர் உயிரிழப்பு: சுகாதாரத்துறை தகவல்

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,016 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுதும் பேரழிவை உண்டாக்கிய கொரோனாவால் பாதிக்கப்படுவோர்களின் எண்ணிக்கை இந்தியாவில் கடந்த சில காலமாக குறைந்து வருகிறது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக ஒன்றிய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில்; நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,016 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,46,63,968 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புதிதாக தொற்றால் 3 பேர் உயிரிழந்த நிலையில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 5,30,514 ஆக உள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 4,41,20,267 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் தற்போது 13,187 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாடு முழுவதும் இதுவரை 2,19,76,55,203 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 1,32,767 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.