தமிழ்நாட்டின் டெல்டா விவசாயிகளின் பயிர்க்காப்பீட்டிற்கான காலவரம்பினை நீட்டிக்கக்கோரி மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இது குறித்த செய்திக்குறிப்பில், வடகிழக்கு பருவமழை மற்றும் இதர காரணங்களினால் விவசாயிகள் பொதுசேவை மற்றும் நிதி நிறுவனங்களின் சேவைகளை பெற இயலாத நிலை உள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக பயிர்க்காப்பீடு செய்வதற்கான காலவரம்பினை வரும் 30 வரை நீட்டிக்க வேண்டும் என கடிதத்தில் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.