இன்று உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் வரும் 20ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு.!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த மாதம் 29ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இதனால் சென்னை உள்பட பல மாவட்டங்களில் பரவலாக கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முன்னதாக கடந்த 9-ம் வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி ஓரிரு நாள்களில் வலுவிழந்தது. 

இதன் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக கனமழையும், ஒரு சில இடங்களில் மிகக் கனமழையும் கொட்டித் தீர்த்தது. 

இன்று தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகுவதன் காரணமாக தமிழகத்தில் வரும் 20ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

மேலும், இன்று தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.