வெந்நீர் வைத்திருந்த பாத்திரத்தில் தவறி விழுந்த ஒன்றரை வயது குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..!

திருவள்ளூர் ஊத்துக்கோட்டை அருகே, வெந்நீர் வைத்திருந்த பாத்திரத்தில் தவறி விழுந்த ஒன்றரை வயது குழந்தை, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

தாமரைக்குப்பத்தைச் சேர்ந்த ரசாக் – ஜெரினா தம்பதியின் மகன் அஜ்மீர். கடந்த 10ம் தேதி குழந்தையை குளிக்க வைப்பதற்காக குளியலறையில், வெந்நீரை அன்னக்கூடையில் ஊற்றி வைத்த ஜெரினா, சோப்பு துண்டை எடுக்க வீட்டுக்குள் சென்றுள்ளார்.

அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தை, எதிர்பாராத விதமாக வெந்நீருக்குள் தவறி விழுந்தது. படுகாயமடைந்த குழந்தை மேல் சிகிச்சைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்றிரவு உயிரிழந்தது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.