தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசம் உருவாகியுள்ளது.
அது மேலும் வலுவடைந்து நவம்பர் 19 ஆம்இ மற்றும் 20 ஆம் திகதிகளில் வடக்குக் கரையை அண்மிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனால், ஆழம் கூடிய மற்றும் ஆழம் குறைந்த கடற்பரப்புகளில் கடலில் பயணம் செய்வோரும் ,மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வழங்கப்படும் எதிர்கால ஆலோசனைகள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு திணைக்களம் இன்று (16) நண்பகல் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.