மோடி – ரிஷி சுனக் சந்திப்பு; அடுத்த நிமிடமே இந்தியர்களுக்கு ஹேப்பி நியூஸ்!

ஆண்டுதோறும் 3,000 இந்தியர்களுக்கு க்ரீன் விசா வழங்க உள்ளதாக, பிரிட்டன் அரசு அறிவித்துள்ளது.

தென் கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவில் உள்ள பாலி தீவில் கடந்த 15 ஆம் தேதி தொடங்கிய ஜி – 20 உச்சி மாநாடு இன்றுடன் நிறைவு பெறுகிறது. இந்த மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், சீன அதிபர் ஷி ஜின்பிங், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில் இன்று, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார். முதன் முறையாக நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கு இடையேயான நல்லுறவை மேம்படுத்துவது, வர்த்தகம், பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் நேரில் சந்தித்துப் பேசிய அடுத்த சில மணி நேரத்தில் பிரிட்டன் அரசு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

நீண்ட போராட்டத்திற்கு பிறகு.. நிலவை நோக்கி விண்ணில் பாய்ந்த ஆர்டெமிஸ்-1 ராக்கெட்!

பிரிட்டன் அரசு வெளியிட்டு உள்ள அறிவிப்பில், ‘ஒவ்வொரு வருடமும் 3,000 திறமையான மற்றும் இளம் ப்ரொபஷனல் ஊழியர்களை இந்தியாவில் இருந்து அழைக்கும் சிறப்பு விசா திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்படுகிறது. உலகில் முதல் முறையாக இந்தியா தான் இத்தகைய சிறப்பு விசா திட்டத்தின் கீழ் நன்மை அடைகிறது. இதன் மூலம் கடந்த ஆண்டு இந்தியா – பிரிட்டன் மத்தியிலான மைக்ரேஷன் – மொபிலிட்டி பார்ட்னர்ஷிப் வலிமை அடையும்’ எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பிரிட்டன் அரசின் இந்த அறிவிப்பு மூலம் பட்டப்படிப்பு முடித்த 30 வயது வரையிலான இந்தியர்கள் இந்த விசாவைப் பெற்று 2 ஆண்டுகள் வரை அந்நாட்டில் பணியாற்ற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.