யார் ஹிந்து? ஆர்எஸ்எஸ் மோகன் பாகவத் புது விளக்கம்!

சத்தீஸ்கர் மாநிலம், சுர்குஜா மாவட்டத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் சார்பில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, இதில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பேசியது:

ஹிந்துத்தவா சித்தாந்தம் நாட்டின் பன்முகத்தன்மையை ஆதரிக்கிறது. மக்களிடையே நிலவும் ஒற்றுமையை நம்புகிறது. இந்தியர்கள் அனைவரின் டிஎன்ஏவும் ஒன்றுதான்.

அனைத்து மத நம்பிக்கைகளையும், அவர்களின் சடங்குகளையும் மதிக்க வேண்டும். பிறரின் நம்பிக்கையை மாற்ற முயற்சிக்க கூடாது. பிற நலனில் அக்கறை காட்டாமல் சுயநலமாக இருக்க யாரும் முயற்சிக்க கூடாது.

பல்வேறு மொழி, கலாசாரம், பண்பாடு, மொழி, உணவுப் பழக்கம், சித்தாந்தம் கொண்ட நம் நாட்டில், இந்தியாவை தாய் மண்ணாக கருதி வேற்றுமையில் ஒற்றுமையுடன் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

எனவே இந்தியவில் வாழும் அனைவரும் ஹிந்துகள்தான். இதனை ஆர்எஸ்எஸ் தொடங்கப்பட்ட நாள் முதல் எங்களைப் போன்றவர்கள் கூறி வருகின்றனர்.

மனு ஸ்மிருதியில் ஹிந்துக்கள் என்பவ்ர்கள் யார் என்பது குறித்து குறிப்பிடப்பட்டுள்ளதாக திமுக எம்பி ஆ.ராசா சில மாதங்களுக்கு முன் பொதுவெளியில் கூறியிருந்த கருத்து, கடும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் ஹிந்துகள் குறித்து மோகன் பாகவத் இவ்வாறு கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.