கடற்றொழிலாளர்களுக்கு மீண்டும் அறிவுறுத்தல்

தென்கிழக்கு வங்காள விரிகுடாகடற்பரப்புகளிலும் அண்மையாகவுள்ள வட அந்தமான் கடற்பரப்புகளிலும் காணப்படுகின்ற குறைந்த அழுத்தப் பிரதேசம் பெரும்பாலும் இன்று 19 ஆம் திகதியளவில் ஒரு தாழமுக்கமாக வலுவடையக் கூடிய சாத்தியம்காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

திணைக்களம் நேற்று மாலை  விடத்துள்ள அறிக்கையில் ,குறைந்த அழுத்தப் பிரதேசம், மேற்கு- வடமேற்குதிசையில் நகர்ந்து நவம்பர் 20 ஆம் மற்றும்21 ஆம்திகதிகளில் இலங்கையின்வடக்குக்கரையை அண்மிக்கக்கூடியசாத்தியம் காணப்படுகின்றது.
 
எனவே, காங்கேசந்துறையிலிருந்து திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட ஆழம் கூடிய மற்றும் ஆழம் குறைந்த கடற்பரப்புகளிலும் வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் நவம்பர் 18 ஆம் திகதியிலிருந்து 21 ஆம் திகதி வரை நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள் என்று மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.