NVQ சான்றிதழ்கள் இல்லாத பயிலுனர்களுக்கு விழிப்புணர்வு திட்டம்

சான்றிதழ்கள் இல்லாத திறமையான கைவினைஞர்களுக்கான தேசிய தொழில் தகைமை (NVQ) சான்றிதழை பெற்றுக்கொள்வது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி மாத்தளை மாவட்ட இரத்தோட்டை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் (17) நடைபெற்றது.

தேசிய பயிலுனர் மற்றும் தொழில்நுட்ப பயிற்சி அதிகாரசபை இரத்தோட்டை பிரதேச செயலகத்துடன் இணைந்து இந்த நிகழ்ச்சித் திட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.

இரத்தோட்ட உதவி பிராந்திய செயலாளர் திருமதி அஞ்சலா திஸாநாயக்க தலைமையில் ஆரம்பமான இந்நிகழ்வில்  கைவினை பயிலுனர்கள் கலந்துகொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.