சட்டம் – ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக சங்கர் நியமனம்; தமிழகத்தில் 9 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

சென்னை: தமிழகத்தில் 9 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சட்டம் – ஒழுங்கு கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, சட்டம் – ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக ஐபிஎஸ் அதிகாரி சங்கரை நியமித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழக சட்டம் – ஒழுங்கு ஏடிஜிபி தாமரைக்கண்ணன் இன்று பணி ஓய்வு பெற்றார். இதனைத் தொடர்ந்து, தமிழக காவல் துறையின் நிர்வாகப் பிரிவு கூடுதல் டிஜிபியாக இருந்து வரும் ஐபிஎஸ் அதிகாரி சங்கரை சட்டம் – ஒழுங்கு ஏடிஜிபியாக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

காவல் தலைமையக ஏடிஜிபியாக செயல்பட்டு வந்த வெங்கட்ராமன், கூடுதலாக நிர்வாகப் பிரிவையும் சேர்த்து கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் ஊர்க்காவல் படை, கமாண்டோ படை ஏடிஜிபியான ஜெயராம், ஆயுதப்படை ஏடிஜிபியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் .

தமிழக காவல் துறையின் பயிற்சி பள்ளி மற்றும் அகாடமிகளை டிஜிபி சைலேந்திரபாபு கூடுதல் பொறுப்பாக கவனித்துக் கொள்வார் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதேபோல், கோவை சட்டம் – ஒழுங்கு துணை ஆணையராக செயல்பட்டு வந்த மதிவாணன், போக்குவரத்து பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கோவை போக்குவரத்துப் பிரிவில் இருந்த அசோக்குமார், சென்னை சைபர் க்ரைம் பிரிவுக்கு மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், கடலோர காவல் படையின் துணை ஆணையர் செல்வக்குமார், தமிழ்நாடு கமாண்டோ படையின் எஸ்பியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவர்கள் உள்பட மொத்த 9 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.