ஒதுக்கீடு ரத்து செய்யப்படும்.. தமிழக அரசுக்கு மத்திய அரசு எச்சரிக்கை..!

வரும் 15-ம் தேதிக்குள் பயனாளிகளுக்கு நிலத்தை ஒதுக்காவிட்டால், இந்த ஒதுக்கீட்டை ரத்து செய்துவிட்டு, சிறப்பாக செயல்படும் மற்ற மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் என்று தமிழக அரசுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதி திட்டத்தின்கீழ், ஏழைகளுக்கு வீடு கட்டுவதற்கான நிதியுதவியை மத்திய அரசு வழங்கியுள்ளது. இதில், நிலம் இல்லாத மக்களுக்கு நிலம் வழங்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

இந்நிலையில், ஒட்டு மொத்தமாக 5 ,24,000 ஆயிரம் பயனாளிகளில் இதுவரை 2,75,000 பயனாளிகளுக்கு பல்வேறு மாநிலங்களும் நிலம் ஒதுக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. அதிகபட்சமாக, மகாராஷ்டிராவில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு இன்னும் நிலம் வழங்கப்படவில்லை.

அதற்கு அடுத்தபடியாக, தமிழ்நாட்டில் 96,806 பேருக்கு நிலம் வழங்க வேண்டியுள்ளது. மேலும், அசாம், ஒடிசா, பீகார் மாநிலங்களிலும் நிலம் ஒதுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, மாநில அரசுகளுக்கு மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. அதில், வரும் 15-ம் தேதிக்குள் பயனாளிகளுக்கு நிலத்தை ஒதுக்காவிட்டால், இந்த ஒதுக்கீட்டை ரத்து செய்துவிட்டு, சிறப்பாக செயல்படும் மற்ற மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.