மகாராஷ்டிரா மாநிலம் கல்யாண் ரயில் நிலையம் அருகே 9 வயது சிறுமியின் சடலம் அரை நிர்வாண கோலத்தில் கண்டெடுக்கப்பட்டது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்த போது, அதே பகுதியை சேர்ந்த சிறுவன் ஒருவன் இருந்தது தெரியவந்தது. சந்தேகத்தின் பேரில், 15 வயது சிறுவனை விசாரணை மேற்கொள்ள அவரது குடியிருப்பு பகுதிக்கு அதிகாரிகள் சென்றனர்.
அப்போது சிறுவனின் பதில் சந்தேகத்திற்குரிய வகையில் இருந்ததால் அவரிடம் கடுமையாக விசாரணை மேற்கொண்டனர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது.
சில நாட்களுக்கு முன்பு சிறுமியின் தந்தைக்கும், சிறுவனுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் சிறுமியின் தந்தை சிறுவனை தாக்கியுள்ளார். இதனால் கடும் கோபத்தில் இருந்த அந்த சிறுவன், அவரை பழிவாங்க மகளை கொலை செய்ய திட்டமிட்டார்.
சம்பவத்தன்று சிறுமியை கடத்தி, ஆள் இல்லாத இடத்திற்கு கொண்டு சென்ற சிறுவன், அங்கே வைத்து அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் தான் மறைத்து வைத்திருந்த பிளேடை கொண்டு அவரது கழுத்தை அறுத்துள்ளார்.
குற்றவாளி மீது பாலியல் வன்கொடுமை, கொலை, போக்சோ உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in