கர்நாடக மாநிலம், பெங்களூருவில் உள்ள சம்பிகேஹள்ளியில் வசிக்கும் தம்பதிக்கு, 2011-ல் திருமணம் நடந்து. அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. கணவர் தனியார் நிறுவனத்தில் தொழில்நுட்ப வல்லுநராக (techie )பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், கணவன் மீது மனைவி காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.
அந்தப் புகாரில், “என் கணவர் மது அருந்தும் பழக்கம் இருப்பவர். போதைப் பொருளையும் உட்கொள்கிறார். இதனால், தினமும் வீட்டில் சண்டை நடந்துவந்தது. இந்த நிலையில், அவர் தன் இரண்டு நண்பர்களை வீட்டுக்கு அழைத்து வந்து, அவர்களுடன் என்னை உடலுறவுக் கொள்ள வற்புறுத்துகிறார். போனில் அவர்களுடன் நான் இருப்பது போன்ற வீடியோவை எடுத்து வைத்துக் கொண்டு, இணையதளத்தில் வெளியிட்டு விடுவதாக மிரட்டுகிறார்.

விவாகரத்து கேட்கும் போதெல்லாம் அந்த வீடியோவை வெளியிடுவதாக கூறி விவாகரத்து தர மறுக்கிறார். இதனால் நான் மிகவும் மன வேதனையில் துடிக்கிறேன். என் கணவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
இது தொடர்பாக காவல்துறை தரப்பு, “தன் மனைவியின் சகோதரியை தன்னுடன் உடலுறவு கொள்ள வற்புறுத்தியதாக ஏற்கெனவே அவர் மீது குற்றச்சாட்டு இருக்கிறது. அவரையும், அவரின் நண்பர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம்” எனத் தெரிவித்திருக்கிறது.