அதிமுக பொதுக்குழு வழக்கு: ஜனவரி 4க்கு ஒத்தி வைப்பு!

அதிமுக பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில், மனுக்கள் மீதான விசாரணையை ஜனவரி 4 ஆம் தேதிக்கு தள்ளி வைத்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டு உள்ளனர்.

கடந்த ஜூலை மாதம் 11 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில்

இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அத்துடன்

உள்ளிட்ட சில நிர்வாகிகள் கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர்.

எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக நிர்வாகி வைரமுத்து ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட இடையீட்டு மனுவில், அதிமுக பொதுக்குழு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணங்கள் மீது தேர்தல் ஆணையம் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதால் கட்சிப் பணிகள் தொய்வடைந்து உள்ளது என்றும், தலைமை தேர்தல் ஆணையத்திற்கு உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது.

அதே சமயம் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட விளக்க மனுவில் அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் குறித்து இன்னும் எந்த ஒரு முடிவும் எடுக்கப்படாத நிலையில் தேர்தல் ஆணையத்தை இந்த வழக்கில் மனுதாரராக சேர்க்க முடியாது என்றும் எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, நேரமின்மை காரணமாக வழக்கை நாளைக்கு தள்ளி வைக்கலாமா என்று நீதிபதிகள் கேட்டனர். அப்போது, எடப்பாடி பழனிசாமி தரப்பில், நாளைக்கு வேண்டாம் கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு பின் தள்ளி வைக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், இந்த விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு காலவதியாகி விட்டது என்ற ஒரு வாதமும் முன்வைக்கப்பட்டது.

இதனை பதிவு செய்துக் கொண்ட நீதிபதிகள், அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பான மனுக்கள் மீதான விசாரணையை ஜனவரி 4 ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு தள்ளி வைத்தனர். இதற்குள் எழுத்துப்பூர்வமான அனைத்து வாதங்களையும் தாக்கல் செய்வதை உறுதி செய்யுமாறு இரு தரப்பிற்கும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.