
ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கும் ‛கலியுகம்' : முதல்பார்வை வெளியீடு
விக்ரம் வேதா, நேர்கொண்ட பார்வை உள்ளிட்ட படங்களில் நடித்த ஷ்ரத்தா ஸ்ரீநாத் அடுத்து ‛கலியுகம்' என்ற படத்தில் நடித்துள்ளார். ஆடுகளம் கிஷோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். பிரமோத் சுந்தர் இயக்கி உள்ளார். படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இந்நிலையில் படத்தின் முதல்பார்வை வெளியாகி உள்ளது.
படம் பற்றி இயக்குனர் கூறுகையில், ‛‛மூன்றாம் உலகப் போருக்கு பின் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை இந்த படம் விவரிக்கிறது. உலகில் பல நாடுகள் சந்திக்க உள்ள இழப்புகள், சமகால நெருக்கடிகளும் இந்த படத்தில் இடம் பெறுகிறது'' என்றார் பிரமோத் சுந்தர்.