“போருக்குத் தயாராகும் சீனா; தூங்கிக் கொண்டிருக்கும் இந்தியா!" – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

சமீபத்தில் அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் எல்லையில், சீனா அத்துமீறி நுழைந்ததாக இந்திய ராணுவத்துக்கும் சீன ராணுவத்துக்கும் இடையே தாக்குதல் நடந்த விவகாரம் இன்றுவரை பேசுபொருளாகிக்கொண்டே இருக்கிறது. இதற்கிடையில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சீனாவின் ஊடுருவலை இந்திய வீரர்கள் முறியடித்துவிட்டனர் என்றும், தாக்குதலில் இந்திய வீரர்கள் சிலர் காயமடைந்தனர் என்றும் நாடாளுமன்றத்தில் விளக்கமளித்திருந்தார்.

இந்தியா – சீனா

அதைத் தொடர்ந்து இந்த விவகாரத்தில், `மோடி அரசின் சிவப்புக் கண்களை சீனக் கண்ணாடிகள் மறைத்துக்கொண்டிருக்கின்றன’ என மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்திருந்தார். இந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, சீனா போருக்குத் தயாராகி வருவதாகவும், அரசு அதனை மறைப்பதாகவும் குற்றம்சாட்டியிருக்கிறார்.

ராகுல் காந்தி

பாரத் ஜோடோ யாத்திரையின் 100-வது நாள் நிறைவு விழாவையொட்டி ராஜஸ்தானின் தௌசா பகுதியில் பேசிய ராகுல் காந்தி, “சீனா நம்முடைய நிலத்தைக் கைப்பற்றியிருக்கிறது. அவர்கள் நம் ராணுவ வீரர்களை அடித்து விரட்டுகிறார்கள். சீனாவின் அச்சுறுத்தல் மிகத் தெளிவாக இருக்கிறது. ஆனால், அரசாங்கம் இதனை மறைத்து புறக்கணிக்கிறது. லடாக் மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தில் சீனா போருக்குத் தயாராகிவருகிறது. அதேசமயம், இந்திய அரசாங்கம் தூங்கிக்கொண்டிருக்கிறது” என்று கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.