பேனா நினைவுச்சின்னத்திற்கு தடை கோரி வழக்கு-மத்திய – மாநில அரசுகள் பதிலளிக்க தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

சென்னை மெரினா கடற்பகுதியில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவாக, 42 மீட்டர் உயர பேனா நினைவுச்சின்னம் அமைக்க தடைக்கோரிய வழக்கில், மத்திய – மாநில அரசுகள் மற்றும் சென்னை மாநகராட்சி பதிலளிக்க, தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

நேப்பியர் பாலம் முதல் கோவளம் வரையிலான கடலோர பகுதிகள், பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், இப்பகுதிகளில் கட்டுமானங்கள் மேற்கொள்வதால், ஆமைகளின் இனப்பெருக்கம் பாதிக்கப்படுவதுடன், கடல் வளமும் பாதிக்கப்படும் எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளின் படி, நிபுணர் குழுவை அமைத்து, விதிகளுக்கு மாறாக கட்டப்பட்டுள்ள அனைத்து கட்டுமானங்களையும் அகற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

வழக்கை விசாரித்த தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம், மனு மீது 8 வாரங்களில் பதிலளிக்க மத்திய – மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டதுடன், விசாரணையை பிப்ரவரி 2ம் தேதிக்கு தள்ளிவைத்தது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.