
சொர்க்கத்தில் இருக்கும் மகள் நந்தனாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த பாடகி சித்ரா!
தமிழ், மலையாளம் உட்பட பல மொழிகளில் பின்னணி பாடி வருபவர் கே.எஸ் .சித்ரா. விஜய சங்கர் என்பவரை திருமணம் செய்து கொண்ட சித்ராவுக்கு நந்தனா என்ற ஒரு மகள் இருந்தார். கடந்த 2011ம் ஆண்டு ஒரு இசை நிகழ்ச்சிக்காக துபாய் நாட்டுக்கு சென்று இருந்த போது அங்குள்ள நீச்சல் குளம் ஒன்றில் தவறி விழுந்து நந்தனா இறந்து விட்டார்.
இந்நிலையில் டிசம்பர் 18ம் தேதியான இன்று மகளின் பிறந்த நாள் என்பதால் தனது சோசியல் மீடியாவில் ஒரு நெகிழ்ச்சியான பதிவு போட்டிருக்கிறார் பாடகி சித்ரா. அந்த பதிவில், சொர்க்கத்தில் தேவதைகளுடன் பிறந்தநாள் கொண்டாடும் உனக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள். எல்லா இடத்திலும் அன்பு செலுத்தும் உனக்கு வயது அதிகம் ஆகாது. நீ பாதுகாப்பாக இருக்கிறாய் என்று எனக்கு தெரியும். உன்னை மிகவும் மிஸ் பண்ணுகிறேன் என்று அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.