மருமகனுக்கு புல்டோசர் பரிசளித்த மாமனார்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

லக்னோ : உத்தர பிரதேசத்தில் திருமண பரிசாக மருமகனுக்கு, மாமனார் ‘புல்டோசர்’ வழங்கி ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

உ.பி.,யின் ஹமிர்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரரான பரசுராம் பிரஜாபதி, தன் மகள் நேகாவுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார்.

இதையடுத்து சாவன்கார் பகுதியைச் சேர்ந்த, யோகேந்திரா பிரஜாபதி என்பவருக்கும், நேகாவுக்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது. யோகேந்திரா கடற்படை அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், தன் மருமகனுக்கு திருமண பரிசாக மாமனார் புல்டோசரை வழங்கியுள்ளார்.

இது பற்றி பரசுராம் கூறுகையில், ‘மருமகனுக்கு திருமண பரிசாக கார் வாங்கி கொடுத்தால், அதனால் பெரிய அளவில் பயன் இல்லை. பயணத்துக்கு மட்டுமே உதவும். புல்டோசர் கொடுத்தால், அது, அவரது வருமானத்துக்கு உதவும். அதனால் தான் இந்த முடிவை எடுத்தேன்’ என்றார்.

மணமகன் வீட்டார் கூறுகையில், ‘நாங்கள் வரதட்சணையாக எதுவும் கேட்கவில்லை. அவர்களாகவே இந்த புல்டோசரை வாங்கி கொடுத்துஉள்ளனர்’ என்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.