முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கார் மீது தாக்குதல்.. ஊராட்சி குழு துணை தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட நபர் கடத்தல்..?

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கார் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேடசந்தூர் அருகே கரூர் – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் எம்.ஆர். விஜயபாஸ்கர் தனது ஆதரவாளர்களுடன் கரூர் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, நாகம்பட்டி பாலம் அருகே 4-க்கும் மேற்பட்ட கார்களில் வந்த மர்ம நபர்கள், எம்.ஆர். விஜயபாஸ்கரின் வாகனத்தை மறித்து அதன் கண்ணாடியை உடைத்ததுடன், அவருடன் காரில் வந்த கரூர் மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட திருவிகா என்பவரையும் கடத்திச் சென்றதாக சொல்லப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.