கடந்த 5 நிதியாண்டுகளில் ரூ.10.09 லட்சம் கோடி வாரா கடன்கள் வங்கிகளின்  கணக்கில் இருந்து தள்ளுபடி! நிர்மலா சீத்தாராமன்

டெல்லி: நாட்டில், 5 நிதியாண்டுகளில் ரூ.10.09 லட்சம் கோடி வாரா கடன்கள் வங்கிகளின்  கணக்கில் இருந்து தள்ளுபடி ((ரைட்-ஆஃப்)  செய்யப்பட்டு உள்ளது என பாராளுமன்றத்தில்  மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

மக்களவையில் வங்கிகளின் வாராக் கடன்கள் குறித்த விவகாரம் தொடர்பாக பல உறுப்பினர்கள்   கேள்வி நேரத்தின்போது கேள்வி எழுப்பினர்.  அதற்கு பதிலளித்து பேசிய நிதியமைச்சர்  அமைச்சா் நிா்மலா சீதாராமன், இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) தரவுகளின் அடிப்படையில்,  கடந்த 5 ஆண்டுகளில் வங்கிகள் ரூ.10 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்துவிட்டன, ஆனால் அனைத்தும் இழக்கப்படவில்லை என மத்திய நிதியமைச்சர் சீதாராமன் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்

பட்டியலிடப்பட்ட வங்கிகள் கடந்த 5 ஆண்டுகளில் ரூ.10,09,511 கோடி வாராக்கடனை செயல்படாத சொத்தாக (ரைட்-ஆஃப்) வரையறுத்துள்ளது என்றும், கடன் வாங்கியவர்களிடமிருந்து நிலுவைத் தொகையை வசூலிக்கும் செயல்முறை தொடர்கிறது என்று விளக்கம் அளித்ததுடன்  கடந்த ஐந்து நிதியாண்டுகளில் பொதுத்துறை வங்கிகள் தள்ளுபடி செய்யப்பட்ட கடன்கள் மூலம் ரூ.1,03,045 கோடி உட்பட ரூ.4,80,111 கோடியை மீட்டுள்ளன என்றும் கூறினார்.

சீதாராமன், NPA (செயல்படாத சொத்து) கணக்குகளில், தள்ளுபடி செய்யப்பட்ட கடன்கள் உள்ளிட்டவற்றை மீட்டெடுப்பது நடந்துகொண்டிருக்கும் செயல்முறையாகும் என்று விளக்கம் அளித்தவர், ‘‘பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட வங்கிகள் கடந்த 5 ஆண்டுகளில் ரூ.10,09,511 கோடி வாராக்கடனை செயல்படாத சொத்தாக வரையறுத்துள்ளன. வங்கிகளின் முதலீட்டை மேம்படுத்தவும், வரிச் சலுகை பெறவும், கணக்கு அறிக்கைகளை சீா்படுத்தவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இந்திய ரிசா்வ் வங்கியின் (ஆா்பிஐ) வழிகாட்டுதல் மற்றும் கொள்கையின்படியே இந்த நடவடிக்கையை வங்கிகள் கடைப்பிடித்து வருகின்றன.

அதே வேளையில், அந்த வாராக்கடன்களை வசூலிப்பதற்கான நடவடிக்கைகளையும் வங்கிகள் தொடா்ந்து மேற்கொண்டு வருகின்றன. ஆா்பிஐ தரவுப்படி கடந்த 5 ஆண்டுகளில் பொதுத்துறை வங்கிகள் ரூ.4,80,111 கோடி வாராக்கடனை வசூலித்துள்ளன. அதில் ரூ.1,03,045 கோடியானது செயல்படாத சொத்தாக வரையறுக்கப்பட்டவை.

வங்கிகள், ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்கள் மற்றும் வாரியங்கள் அங்கீகரித்த கொள்கையின்படி, வங்கிகள் தங்கள் இருப்புநிலைக் குறிப்பைச் சுத்தம் செய்வதற்கும், வரிச் சலுகைகளைப் பெறுவதற்கும், மூலதனத்தை மேம்படுத்துவதற்கும் வழக்கமான நடவடிக்கையின் ஒரு பகுதியாக, தள்ளுபடியின் தாக்கத்தை மதிப்பீடு செய்து கருத்தில் கொள்கின்றன.

மற்றொரு கேள்விக்கு பதிலளித்த சீதாராமன், கடன் செலுத்தாதவர்களிடமிருந்து சிறு வைப்பாளர்கள் மற்றும் முதலீட்டாளர்களின் பணத்தை திரும்பப் பெறுவதற்கான செயல்முறை மிகவும் சிக்கலானது, ஏனெனில் சட்ட செயல்முறை நீண்டது மற்றும் வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்களை உள்ளடக்கிய பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளுக்கு பல உரிமைகோரல்கள் உள்ளன. டெபாசிட் செய்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியிருப்பது குறித்து தாம் அறிந்திருப்பதாகவும், இந்தச் சிக்கலையும், செயல்முறையை எப்படி எளிமையாக்குவது என்பதையும் கவனிக்க வேண்டிய அவசியம் இருப்பதாக அமைச்சர் கூறினார்.

சிறு முதலீட்டாளா்கள் வங்கி சேமிப்பாளா்களின் பணத்தைக் கடனாக வங்கிகள் வழங்கி வருகின்றன. அக்கடனைப் பெற்று திருப்பிச் செலுத்தாமல் மோசடியில் ஈடுபடுபவா்களிடமிருந்து வாராக்கடனை மீட்பதற்கான நடவடிக்கைகள் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பல்வேறு சட்ட சிக்கல்கள் உள்ளதால் முடக்கப்பட்ட சொத்துகள் மூலமாக வாராக்கடனை மீட்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. அத்தகைய பிரச்னைகளைத் தீா்ப்பது தொடா்பாக மத்திய அரசு ஆராய்ந்து வருகிறது’’ என்றாா்.

 மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அமைச்சா் நிா்மலா சீதாராமன், ‘‘நாட்டில் புழக்கத்தில் உள்ள நோட்டுகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு 7.98 சதவீதம் அதிகரித்து ரூ.31.92 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. அந்த எண்ணிக்கையானது நாட்டின் பொருளாதார வளா்ச்சி, பணவீக்கம், இணையவழி பணப் பரிவா்த்தனை உள்ளிட்டவற்றைச் சாா்ந்து அமைந்துள்ளது.  புழக்கத்தில் உள்ள நோட்டுகளின் எண்ணிக்கையைக் குறைத்து இணையவழி பணப் பரிவா்த்தனைகளை அதிகரிப்பதே மத்திய அரசின் இலக்கு. இதன் மூலமாக கருப்புப் பண புழக்கமும் ஒழியும். அதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசும் ஆா்பிஐ-யும் தொடா்ந்து மேற்கொண்டு வருகின்றன என்றும் கூறினார்.

முன்னதாக, நிதித்துறை இணையமைச்சர் பகவத் கிஷன்ராவ் கராட், ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்கள் காரணமாக கடன் செலுத்தாதவர்களின் பெயர்கள் வெளியிடப்படவில்லை, ஆனால் அவர்களின் சொத்துக்கள் ஏலத்தில் விடப்பட்டவுடன் அவர்களின் பெயர்களை வெளியிட முடியும் என்று கூறினார்.

ரைட்-ஆஃப் (Write-Off) என்றால் என்ன? ரைட்-ஆஃப் என்பது ஒரு கணக்கியல் நடவடிக்கையாகும், இது ஒரு சொத்தின் மதிப்பைக் குறைக்கிறது, அதே நேரத்தில் பொறுப்புக் கணக்கில் பற்று வைக்கிறது. செலுத்தப்படாத கடன் பொறுப்புகள், செலுத்தப்படாத வரவுகள் அல்லது சேமிக்கப்பட்ட சரக்குகளின் இழப்புகள் ஆகியவற்றைக் கணக்கிட முற்படும் வணிகங்களால் இது முதன்மையாக அதன் நேரடி அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.