எடப்பாடிக்கு கிடைச்ச கிப்ட்… கொஞ்ச நேரத்தில் வந்த அறிவிப்பு… அதிமுகவில் அடுத்த சம்பவம்!

அதிமுகவில் என்ன நடக்கிறது? என்று கேட்பவர்களுக்கு மாறி மாறி ஆலோசனை கூட்டங்கள் நடத்த மும்முரம் காட்டப்பட்டு வருகிறது. யார் கையில் கட்சி என்பது இன்னும் உறுதிப்படுத்தப் படவில்லை. இப்படி கூறலாம் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். நாளைய தினம் (டிசம்பர் 21) சென்னை வேப்பேரி தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடத்த

அழைப்பு விடுத்துள்ளார்.

ஓபிஎஸ் விடுத்த அழைப்பு

இதில் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்குகள், பொதுக்குழு கூட்டம், ஜனவரி மாத நிகழ்வுகள் ஆகியவை தொடர்பாக ஆலோசிக்க திட்டமிட்டுள்ளனர். இந்த சூழலில்

தரப்பிடம் இருந்து முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. வரும் 27ஆம் தேதி அதிமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்யப்படவுள்ளன.

எடப்பாடி கூட்டும் கூட்டம்

இதில் தலைமை கழக செயலாளர்கள், மாவட்ட கழக செயலாளர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் சேலத்தில் நடந்த தனியார் நிகழ்ச்சி ஒன்றில் எடப்பாடி பழனிசாமிக்கு நெகிழ்ச்சியூட்டும் சம்பவம் அரங்கேறியது. அதற்கு அடுத்த சில மணி நேரங்களில் தலைமை கழகத்தில் இருந்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சர்ப்ரைஸ் பரிசு இதுதான்

ஓபிஎஸ் தரப்பு ஏவும் அஸ்திரங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடக்கும் கூட்டம் இருக்கும் என்கின்றனர் ரத்தத்தின் ரத்தங்கள். முன்னதாக சேலத்தில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் முன்னாள் முதல்வரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். இதில் அதிமுக நிர்வாகிகள் சிலர் ஒன்று சேர்ந்து பரிசு ஒன்றை வழங்கினர்.

நெகிழ்ந்து போன எடப்பாடி

வழக்கமாக பரிசுப் பொருட்களை வாங்கி தனது உதவியாளரிடம் எடப்பாடி பழனிசாமி அளித்து விடுவார். ஆனால் இம்முறை நிர்வாகிகள் அப்படி விடவில்லை. உடனே பிரித்து பார்க்குமாறு அறிவுறுத்தினர். இதையடுத்து அதனை பிரித்து பார்த்தார். அதைக் கண்டதும் எடப்பாடி பழனிசாமி நெகிழ்ந்து போய்விட்டார்.

தொண்டர்கள் உற்சாகம்

அப்படி என்ன இருந்தது என்கிறீர்களா? தாய் தவசாயி அம்மாளின் புகைப்படம். தாய் பாசத்திற்கு மயங்காதவர்கள் யாரும் இருக்க முடியுமா? என்று பொதுவாக கூறப்படுவது உண்டு. அதில் எடப்பாடி மட்டும் விதிவிலக்கா என்ன? தாயின் புகைப்படத்தை பார்த்ததும் மிகுந்த மகிழ்ச்சி அடைய கண்களில் ஆனந்த கண்ணீரும் பெருக்கெடுத்தது.

இதைக் கண்ட அதிமுக நிர்வாகிகள் உற்சாகத்தில் கைதட்டி வரவேற்றனர். அப்போது, “தவசாயி அம்மாள் பெற்றெடுத்த தங்கமகன் எடப்பாடியார்”, “சேலத்தின் மைந்தன் எடப்பாடியார்”, ”அண்ணன் எடப்பாடியார்” என்றெல்லாம் தொண்டர்கள் முழக்கங்கள் எழுப்பினர். இதனால் மிகுந்த நெகிழ்ச்சி உடன் நிகழ்வு முடிவுக்கு வந்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.