இன்று முதல் 5 நாள்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு

தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 2 தினங்களில் இலங்கை கடற்கரையை நோக்கி மெதுவாக நகரக்கூடும் என, சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, இன்று முதல் 5 நாட்களுக்கு, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழையும் பெய்ய வாய்ப்பிருப்பதாக, வானிலை மையம் கூறியுள்ளது.

வங்கக்கடல், குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் டிச.23ம் தேதி வரை பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்றும் அறிவுறுத்தியுள்ளது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.