`இன்னும் சில நாள்களுக்கு அடர்ந்த மூடுபனியே பல இடங்களில் தொடரும்’- இந்திய வானிலை மையம்!

தலைநகர் டெல்லி உள்ளிட்ட இந்திய-கங்கை சமவெளிப் பகுதிகளில் அடர்ந்த பனிமூட்டம் சூழ்ந்ததால் சாலை மற்றும் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வெப்பநிலையும் குறைந்ததால், அடர்த்தியான மூடுபனி டெல்லி-என்சிஆர் பகுதிகளை மூழ்கடித்து, சாலை மற்றும் ரயில் போக்குவரத்தைப் பாதித்ததுள்ளது.
டெல்லியில் அடுத்த சில நாட்களில் குறைந்தபட்ச வெப்பநிலை ஐந்து டிகிரி செல்சியஸாக குறைய வாய்ப்புள்ளது என சொல்லப்பட்டுள்ளது. தென்மேற்கு திசையில் காற்று வீசியதால், கடந்த 24 மணி நேரத்தில் வெப்பநிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது என கூறப்படுகிறது.
image
பஞ்சாப், ஹரியானா, வடமேற்கு ராஜஸ்தான், உத்திர பிரதேசம், பீகார் மற்றும் உத்தரகண்ட் பகுதிகளில் குறைந்த வெப்பநிலை, அதிக ஈரப்பதம் மற்றும் இன்னும் காற்று வீசுவது ஆகியவற்றுக்கு மத்தியில், அடர்த்தியான முதல் மிக அடர்த்தியான மூடுபனியின் ஒரு அடுக்கு நீடித்து வருவதாகவும், ஹரியானாவில் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் குளிர் அலை முதல் கடுமையான குளிர் அலை நிலைகள் தொடர வாய்ப்புள்ளதாகவும், அதே நேரத்தில் அடுத்த 3-4 நாட்களில் மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில் அடர்ந்த மூடுபனி இருக்கும் என்றும் IMD தெரிவித்துள்ளது. மேலும் பஞ்சாப்பில், டிசம்பர் 25ஆம் தேதி வரை குளிர் அலை நிலைகள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் அடர்ந்த மூடுபனி இருக்கும் என IMD கணித்துள்ளது.
இருப்பினும், டெல்லி விமான நிலையத்தின் செயல்பாடுகள் வழக்கம் போல் செயல்பட்டிருக்கிறது. இதற்கிடையில் டெல்லியில், அடுத்த சில நாட்களில், குறைந்தபட்ச வெப்பநிலை ஐந்து டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்சமாக 20 டிகிரி செல்சியஸாகவும் குறைய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-அருணா ஆறுச்சாமிSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.