மாநகராட்சி வாகனத்தில் பிடித்துச்சென்ற தனது குட்டியை 1 கி.மீ தூரம் பின்தொடர்ந்து ஓடிய தாய் குதிரையின் பாச போராட்டம்..!

மதுரையில், மாநகராட்சி வாகனத்தில் பிடித்துச்செல்லப்பட்ட குதிரை குட்டியை பின்தொடர்ந்து, தாய் குதிரை ஒரு கிலோ மீட்டர் தூரம் ஓடியது.

தென்கரை பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறாக சுற்றித்திரிந்த கால்நடைகளை பறிமுதல் செய்யும் பணிகளில் ஈடுபட்டிருந்த மாநகராட்சி ஊழியர்கள், குதிரை குட்டி ஒன்றையும் மாநகராட்சி வாகனத்தில் ஏற்றினர்.

இதனையடுத்து, மாநகராட்சி வாகனம் செல்ல முடியாதபடி, சிறிதுநேரம் முன்னால் நின்றுக்கொண்ட தாய் குதிரை, பின்னர் கால்நடை காப்பகம் வரை, வாகனத்தை பின்தொடர்ந்து ஓடியது.

தாய் குதிரையின் இந்த பாசப்போராட்டத்தை, சாலையில் சென்றவர்கள் வருத்தத்துடன் பார்த்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.