புதுடெல்லி: கியூட் இளநிலை தேர்வு அடுத்த ஆண்டு மே மாதம் 21ம் தேதி தொடங்கும் என்றும் தேர்வு முடிவுகள் ஜூலை மாதத்துக்குள் வெளியிடப்படும் என்றும் பல்கலைக்கழக மானிய குழு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளில் மாணவர்களை சேர்க்க மத்திய பல்கலைக்கழக பொது நுழைவு (கியூட்) தேர்வை ஒன்றிய அரசு நடத்துகிறது.
இந்நிலையில், அடுத்த ஆண்டுக்கான இளநிலை படிப்புக்கான கியூட் தேர்வு தேதியை பல்கலைக்கழக மானிய குழு அறிவித்துள்ளது. அதன்படி, அடுத்த ஆண்டு மே மாதம் 21 முதல் 31ம் தேதி வரை கியூட் இளநிலை தேர்வுகள் நடைபெறும். ஜூன் மாதத்தில் கியூட் முதுநிலை தேர்வுகள் நடைபெறும் என அறிவித்துள்ளது. தேர்வு முடிவுகள் ஜூலை மாதத்துக்குள் வெளியிடப்படும் என அறிவித்துள்ளது.