விவாகரத்து சர்ச்சை! புகைப்படம் மூலம் விளக்கம் கொடுத்த நடிகை சினேகா



நடிகர் பிரசன்னா – நடிகை சினேகா தம்பதிக்கு விவாகரத்து ஆக போவதாக தகவல் பரவிய நிலையில் அதற்கு சினேகா விளக்கம் கொடுத்துள்ளார்.

பிரசன்னா – சினேகா தம்பதி

பிரசன்னாவுக்கும், சினேகாவுக்கும் கடந்த 2012ல் திருமணம் நடைபெற்ற நிலையில் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் இருவரும் விவாகரத்து பெற்று புதிய போவதாக தொடர்ந்து சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவிய வண்ணம் இருந்து வருகின்றன.

இப்படியான நிலையில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகை சினேகா பிரசன்னாவுடன் சேர்ந்து நடத்திய போட்டோஷூட் புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

முற்றுப்புள்ளி

இது குறித்த பதிவில் என்றைக்கும் என்னுடைய பர்ஃபெக்ட் நீதான் என தன்னுடைய காதலை வெளிப்படுத்தி விவாகரத்து சர்ச்சைக்கு மொத்தமாக முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.





Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.