அண்ணாமலை ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபடுவதில்லை : கொங்கு ஈஸ்வரன்

சேலம்- உளுந்தூர்பேட்டை நான்கு வழிச்சாலையில் 9 இடங்களில் உள்ள இருவழிச் சாலையை விரிவாக்கம் செய்யும் பணியை விரைந்து முடிக்க வேண்டுமென கொங்குநாடு தேசிய மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் வலியுறுத்தி உள்ளார்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே சாலைப்பணிகளை பார்வையிட்ட அவர், சாலை விரிவாக்கம் தொடர்பாக கட்சியின் கோரிக்கையை ஏற்று உத்தரவிட்ட மத்திய அமைச்சர் நிதின்கட்கரிக்கு நன்றி தெரிவிப்பதாக கூறினார்.

மேலும், பல்வேறு கருத்துக்களை பேசி அரசின் கவனத்தை ஈர்த்து வரும் பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை மக்கள் நலம் சார்ந்த விஷயங்களில் பேசுவதில்லை.

சேலம் உளுந்தூர்பேட்டை நான்கு வழிச்சாலையில் இரு வழி சாலையை மாற்ற குரல் கொடுத்தாரா என கேள்வி எழுப்பினர் .

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.