வடஇந்திய மாநிலங்களில் நிலவி வரும் பனி மூட்டம்… 331 ரயில்களின் சேவையை ரத்து செய்தது ரயில்வே நிர்வாகம்!

வட இந்திய மாநிலங்களில் நிலவி வரும் பனி மூட்டம் உள்பட பல்வேறு காரணங்களால் இன்று இயக்கப்படும் 331 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

வடக்கு ரயில்வே, மத்திய ரயில்வே, கிழக்கு ரயில்வே, தென்னக ரயில்வே, மேற்கு ரயில்வே ஆகிய ரயில் நிர்வாகங்கள் உள்ளூர் மற்றும் தொலை தூரங்களுக்கு இயக்கப்படும் 268 ரயில்களின் சேவையை முழுமையாகவும், 63 ரயில்களின் சேவயை பகுதியாகவும் ரத்து செய்துள்ளன.

கடந்த சில நாட்களாகவே, பனிமூட்டம் உள்ளிட்ட காரணிகளால் நூற்றுக்கும் மேற்பட்ட ரயில்களின் சேவைகள் ரத்து செய்யப்படுகின்றன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.