வெளிநாடுகளிலிருந்து தமிழகத்திற்கு வந்தவர்களில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

வெளிநாடுகளிலிருந்து தமிழகத்திற்கு விமானத்தில் வந்தவர்களிடம் எடுக்கப்பட்ட சோதனையில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.

BF.7 என்ற உருமாறிய கொரோனா தொற்று பரவலைத் தொடர்ந்து கடந்த 24ம் தேதி முதல் விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி, 700 பயணிகளிடம் எடுக்கப்பட்ட பரிசோதனையில், சென்னை விமான நிலையம் வந்த 4 பேருக்கும், மதுரை விமான நிலையம் வந்தவர்களில் 2 பேருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

பாதிக்கப்பட்டவர்களின் மாதிரிகள் மரபணு பகுப்பாய்விற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் 3 நாட்களில் எந்த மாதிரியான வைரஸ் தொற்று தாக்கியுள்ளது என்ற தகவல் கிடைத்து விடுமென சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.