உடைத்து வீசப்பட்ட இயேசு சிலை; பிறந்த 3வது நாளிலேயே கொடூரம்!

இயேசு பிறந்த டிசம்பர் 25ம் தேதி, ‘கிறிஸ்துமஸ்’ பண்டிகையாக உலகம் முழுவதும் அமைந்துள்ள தேவாலயங்களில் மிகவும் கோலாகலமாகவும் சிறப்பாகவும் கொண்டாடப்பட்டது. முன்னதாக 24ம் தேதி இரவு கிறிஸ்துமஸ் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது.

இத்தாலி நாட்டில் வாடிகன் நகரில் உள்ள புனித பீட்டர் பேராலயத்தில் போப் பிரான்ஸில் தலைமையில் கிறிஸ்துமஸ் பிரார்த்தனை நடைபெற்றது. இதில் 7000க்கு மேற்பட்டோர் கூடி இருந்த நிலையில் குழந்தை இயேசுவின் சிலை திறந்து வைக்கப்பட்டது.

அப்போது, சிறப்பு பாடல்கள் பாடி, அனைவரும் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இந்த விழாவில் பேசிய போப், ‘நல்லதை செய்யாமல் யாருமே, இந்த கிறிஸ்துமஸ் விழாவை கடந்து செல்ல வேண்டாம்’ என வலியுறுத்தினார்.

இயேசு கிறிஸ்து பிறந்த இடமாக கருதப்படும் பாலஸ்தீனத்தின் பெத்லகேம் நகரில் உள்ள பழமையான நேட்டிவிட்டி தேவாலயத்தில் நள்ளிரவு நடைபெற்ற சிறப்பு திருப்பலி நிகழ்ச்சியில் பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் கர்நாடகாவில் கிறிஸ்துமஸ் பண்டிகை நடந்த 2 நாட்களுக்குள் கிறிஸ்தவ மத வழிபாட்டு தலமான தேவாலயம் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகா மாநிலம் மைசூர் மாவட்டம், பெரியபட்டினத்தில் அமைந்து உள்ள கிறிஸ்தவ மத வழிபாட்டு தலமான புனித மேரி தேவாலயத்தில் தான் இந்த தாக்குதல் நேற்று நடத்தப்பட்டு உள்ளது.

அப்போது வழிபாட்டு தலத்தில் இருந்த குழந்தை இயேசுவின் சிலை சேதப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும், தேவாலயத்தில் இருந்த பொருட்கள் சேதப்படுத்தப்பட்டு உள்ளன.

குறிப்பாக வழிபாட்டு தலத்தில் வைக்கப்பட்டு இருந்த 4 காணிக்கை உண்டியல்களை கொள்ளையர்கள் எடுக்க முயற்சி செய்துள்ளனர். இந்த முயற்சி தோல்வியில் முடிந்தாலும் ஒரு உண்டியல் மட்டும் கொள்ளை கும்பலிடம் சிக்கி உள்ளது.

உண்டியல் பணத்தை கொள்ளையடிக்கும் நோக்கத்தில் இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளதாக, போலீஸ் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்து இருப்பதாக கூறப்படுகிறது.

கிறிஸ்துமஸ் பண்டிகை நேரத்தில் அதிக அளவில் கூட்டம் வந்திருக்கும்.. உண்டியலிலும் அதிக காணிக்கை பணம் சேர்ந்திருக்கும் என கருதிய கும்பல் உண்டியலை கொள்ளையடிக்க வந்து இருக்கலாம் என கூறப்படுகிறது.

அதே சமயம், மொத்தமாக எல்லா உண்டியல்களையும் கொள்ளையடிக்க முடியாததால் முடியாததால் ஆத்திரத்தில், இயேசு சிலைகளை உடைத்து.. வீசி இருக்கலாம் என்று போலீஸ் வட்டாரம் சந்தேகிக்கிறது.

இதனை தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சிலைகளை சேதப்படுத்திவிட்டு உண்டியலை திருடிச் சென்ற கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.