பிரதமர் மோடியின் தாயார் மருத்துவமனையில் அனுமதி

அகமதாபாத்: பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அகமதாபாத்தில் உள்ள யு.என் மேத்தா மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவருக்கு உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குஜராத் சட்டசபை தேர்தலுக்கு முன்பாக காந்திநகரில் வசித்து வரும் தனது தாயார் ஹீராபென்னை சந்தித்து பிரதமர் மோடி ஆசி பெற்றார்.

குஜராத் தேர்தலில் பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென், சக்கர நாற்காலியில் வந்து வாக்களித்து சென்றார். பிரதமர் மோடி தாயார் ஹீராபென்னுக்கு நேற்றுமுன்தினம் இரவு முதல்  உடல்நிலை மோசம் அடைந்ததால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இதற்கிடையே தாயாரை காண பிரதமர் மோடி உடனடியாக அகமதாபாத்  சென்றார். அங்கு மருத்துவமனையில் தாயாரை நேரில் பார்த்து அவரது உடல் நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.