பொங்கல் பண்டிகைக்காக சென்னையிலிருந்து தென் மாவட்டங்கள் மற்றும் கேரளா செல்லும் பயணிகளின் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த தென்னக ரயில்வே உங்கள் சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. அதன்படி தாம்பரம் – திருநெல்வேலி, தாம்பரம் – நாகர்கோயில், கொச்சிவேலி – தாம்பரம் மார்க்கத்தில் ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதே போன்று எர்ணாகுளம்- சென்னை சென்ட்ரல், தாம்பரம் – திருநெல்வேலி மார்க்கம் என 5 சிறப்பு கட்டண ரயில்கள் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. இந்த ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு துவங்கும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.