ஆந்திரா: சந்திரபாபு நாயுடு கட்சி பொதுக்கூட்டத்தில் கடும் நெரிசல் – 7 பேர் பலியான சோகம்

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள கந்துகூரில் நேற்று மாலை தெலுங்குதேசம் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. 2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு தனது பிரசாரத்தின் ஒரு பகுதியாக இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தப் பொதுக் கூட்டத்தில் தெலுங்கு தேசக் கட்சியின் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அந்த கூடியிருந்தனர். இந்த கூட்டத்தில் அந்தக் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு கலந்துக் கொண்டு உரையாற்ற இருந்தார்.

அவரின் வருகையின்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டதாக தெரிகிறது. அதைத் தொடர்ந்து ஏற்பட்ட கைகலப்பில் மக்கள் சிதறி ஓடத் தொடங்கினர். அந்த இடிபாடுகளில் சிக்கி கீழே விழுந்தவர்களில் இதுவரை 7 பேர் வரை உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியிருக்கிறது.

சந்திரபாபு நாயுடு-வின் பொதுக் குழு கூட்டம்

மேலும் பலர் காயமடைந்திருக்கின்றனர். இதைத் தொடர்ந்து, பொதுக்குழுக் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. மேலும், பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறிய சந்திரபாபு நாயுடு, உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்துக்கும் ரூ.10 லட்சம் வழங்குவதாக தெரிவித்திருக்கிறார். இந்த சம்பவம் ஆந்திராவில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.