கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மனைவி தலையில் குழவி கல்லை போட்டு கொன்று விட்டு கணவர் தப்பியோடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே நம்பிகுளம் பகுதியை சேர்ந்தவர் பச்சமுத்து (35). இவரது மனைவி செண்பகம் (32). இவர்கள் இரண்டு பேரும் கேரளாவில் கூலி வேலை செய்து வந்தனர். மேலும் இவர்களுக்கு நான்கு பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் கிறிஸ்மஸ் விடுமுறைக்காக வீட்டிற்கு வந்த கணவன்-மனைவியிடையே கடந்த சில நாட்களாக குடும்பப் பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதையடுத்து நேற்று இரவும் இவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து நள்ளிரவு தூங்கிக் கொண்டிருந்த மனைவி செண்பகத்தின் தலையில், குழவி கலை போட்டு கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதையடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் சென்று பார்த்தபோது செண்பகம் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளார்.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், செண்பகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மனைவியை கொலை செய்து விட்டு தப்பி ஓடிய கணவரை கணவரைப் பிடிக்க மூன்று தனிபடைகள் அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.