டெல்லி செல்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி உடல்நலக்குறைவுக் காரணமாக இன்று அதிகாலை மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரின மறைவை சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனையும், பிரதமர் நரேந்திர மோடியும் உறுதி செய்தனர். தாயாரின் மறைவை அடுத்து அகமதாபாத் விரைந்தார். அகமதாபாத் அருகே ரேசான் கிராமத்தில் உள்ள தாயாரின் குடியிருப்பில் அவரது உடல் வைக்கப்பட்டிருந்த நிலையில், பிரதமர் மோடி அங்கு வந்தார். தொடர்ந்து, தனது தாயாரின் உடலுக்கு மாலையிட்டு, மரியாதை செய்து அவரை வணங்கினார். 

தொடர்ந்து, பிரதமர் தாயாரின் உடல் இறுதிச்சடங்குக்காக எடுத்துச்செல்லப்பட்டது. அப்போது, வீட்டில் இருந்து 
உடலை கொண்டு வாகனம் வரை, தனது தாயாரின் உடலை பிரதமர் மோடி தோளில் தூக்கி சென்றார். பின்னர் உடல் ஊர்தியில் வைக்கப்பட்ட நிலையில், பிரதமர் மோடியும் ஊர்தி தாயாரின் உடலுடன் சென்றார். குஜராத் தலைநகர் காந்திநகரில் இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது. அங்கு பிரதமர் மோடியின் தாயாரின் உடல் தகனம் செய்யப்பட்டது.

அவரது உடல் தகனம் குஜராத் மாநிலம் காந்தி நகரில் நடந்து முடிந்தது. இதையடுத்து, பிரதமர் மோடியிடம் துக்கம் விசாரிப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை டெல்லி செல்கிறார் என தகவல் வெளியானது. ஆனால் பிரதமர் மோடி குஜராத்தில் இருந்து டெல்லி திரும்ப தாமதம் ஏற்பட்டதால் முதல்வர் பயணத்திட்டம் மாற்றப்பட்டுள்ளது. 

இந்நிலையில், பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் நாளை டெல்லி செல்கிறார். நாளை காலை 7 மணிக்கு விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்கிறார். தமிழ்நாடு இல்லம் சென்று தங்கும் அவர் பிரதமர் மோடி டெல்லி திரும்பியதும் தாயார் மறைவுக்கு அவரிடம் துக்கம் விசாரிக்கிறார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.