கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் – பிரிட்டன் அரசு உத்தரவு!

சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் என, பிரிட்டன் அரசு அறிவித்து உள்ளது.

அண்டை நாடான சீனாவின் வூகான் நகரில், கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் கோவிட் – 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று பரவியது. கொரோனா வைரஸ் தொற்றின் பிறப்பிடமான சீனாவில், கடந்த சில வாரங்களாக, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தலைநகர் பெய்ஜிங், ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களில் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளது, சுகாதாரத் துறைக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தற்போதைய பரவலுக்கு ஒமைக்ரான் வைரஸ் தொற்றின் உருமாறிய பிஎப் 7 வகை தொற்று காரணம் என்பது தெரிய வந்துள்ளது. இந்த வகை தொற்றால், அடுத்த மூன்று மாதங்களில், சீனாவின் மக்கள் தொகையில், சுமார் 60 சதவீதம் பேர் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது.

சீனாவில் கொரோனா மீண்டும் விஸ்வரூபமெடுத்து உள்ளது, இந்தியா உட்பட உலக நாடுகளை கதி கலங்கச் செய்துள்ளது. இதைத் தொடர்ந்து சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பரிசோதனை கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது.

Happy New Year 2023: முதல் நாடாக புத்தாண்டை முத்தமிட்ட நியூசிலாந்து..!

அந்த வகையில், சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் என, பிரிட்டன் அரசு அறிவித்து உள்ளது. இந்த அறிவிப்பை அந்நாட்டு அரசு இன்று வெளியிட்டு உள்ளது. அதன்படி,

ஜனவரி மாதம் 5 ஆம் தேதி முதல் நேரடி விமானங்களில் சீனாவில் இருந்து பயணிக்கும் மக்கள், புறப்படுவதற்கு முன்பு, கொரோனா நெகட்டிவ் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது.

அதே போல், ஜனவரி மாதம் 8 ஆம் தேதி முதல், சீனாவில் இருந்து பிரிட்டன் நாட்டிற்கு வரும் பயணிகளுக்கு விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சீனாவில் இருந்து ஸ்காட்லாந்து, வேல்ஸ் அல்லது அயர்லாந்திற்கு நேரடி விமானங்கள் இல்லை என்றாலும், பிரிட்டன் முழுவதும் இந்த நடைமுறை கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.