வேலையின்மையால் தடுமாறும் பாகிஸ்தான்.. 1667 காலியிடங்களுக்காக சுமார் 32 ஆயிரம் பேர் தரையில் அமர்ந்து தேர்வு எழுதினர்..!

பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார தேக்கம் மற்றும் வேலைவாய்ப்பில்லாத சூழல் காரணமாக பல பிரச்சினைகள் எழுகின்றன.

தற்போது சமூக ஊடகங்களில் பரவிவரும் படங்களில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மைதானத்தில் அமர்ந்து இருக்கும் காட்சி பரவி வருகிறது.

இஸ்லாமாபாத் காவல்துறையில் காவலர் பணிக்காக அவர்கள் எழுத்துத் தேர்வில் கலந்துக் கொண்டுள்ள காட்சிதான் இது.  1667 காலியிடங்களுக்காக ஆண்கள் பெண்கள் என சுமார் 32 ஆயிரம் பேர் தரையில் அமர்ந்து தேர்வு எழுதினர்.

கடந்த 5 ஆண்டுகளாக இந்த காலியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.