கலைமாமணி விருது குழு: தேவைப்பட்டால் மாற்றியமைக்கலாம் – நீதிபதிகள்

கலைமாமணி விருது தகுதியானவர்களுக்குத் தான் வழங்கப்பட்டுள்ளதா? என ஆய்வு செய்ய வேண்டிய தேவை இருப்பின், தேர்வுக்குழுவை மாற்றியமைக்க வேண்டுமென தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

2019-2020ம் ஆண்டுக்கான கலைமாமணி விருது தகுதியில்லாதவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறி திருநெல்வேலியைச் சேர்ந்த சமுத்திரம் என்பவர் தாக்கல் செய்திருந்த பொதுநல மனு மீது நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு தீர்ப்பு அளித்தது.

அதில், குழு மாற்றியமைக்கப்பட்டால், அந்த குழு ஏற்கனவே விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்களை ஆராய்ந்து தகுதியானவர்களுக்குத் தான் விருது வழங்கப்பட்டுள்ளதா? என்பதை உறுதி செய்யலாம் என, தீர்ப்பு வழங்கி, வழக்கை முடித்து வைத்தனர்.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.