அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் கர்ப்பிணிகள் சிரமம்.. அரசு நகர்புற சமுதாய நல மையத்தில் சீராக மின்வசதி ஏற்படுத்தி தர கோரிக்கை..!

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியில் உள்ள அரசு நகர்புற சமுதாய நல மையத்தில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால், கர்ப்பிணிகளுக்கு இருட்டு அறையில் பரிசோதனை செய்யப்படுவதாக, அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சமுதாய நல மையத்திற்கு, சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த கர்ப்பிணிகள் பரிசோதனைக்காக வருகை தரும் நிலையில், இன்று 2 மணி நேரம் திடீர் மின் தடை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் ரத்த பரிசோதனை உள்ளிட்டவைகளை மேற்கொள்ள முடியாமல், கர்ப்பிணிகளை திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது.

இங்கு பிரசவ அறையும், அறுவை சிகிச்சை மையமும் அமைந்துள்ள நிலையில், இங்கிருந்து பழுதடைந்து கொண்டு செல்லப்பட்ட ஜெனரேட்டரை விரைவில் சீரமைத்து தர வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.