மின்வாரியத்தில் 101 பேருக்கு கருணை அடிப்படையிலான பணி ஆணையை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

செங்கல்பட்டு மாவட்டம் மேலக்கோட்டையூரில் அமைந்துள்ள தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் 15 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான உள்கட்டமைப்பு வசதிகளை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், விளையாட்டு பல்கலைக்கழக வளாகத்தில் 7 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள செயற்கையிழை ஓடுதளம், 5 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு ஜிம்னாஷியம், 3 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கான குடியிருப்புகளை காணொலி காட்சி மூலமாக முதலமைச்சர் திறந்து வைத்தார். நிகழ்ச்சியின்போது, விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உடனிருந்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.