அதிமுக பொதுக்குழு வழக்கு: இன்று மீண்டும் விசாரணை – யாருக்கு சாதகம்?

அதிமுக பொதுக்குழு வழக்கு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெறுகிறது.

அதிமுகவில் உட்கட்சி மோதல் நாளுக்கு நாள் வலுத்து வரும் நிலையில் யார் உச்ச பதவியை கைப்பற்றுவது என்ற போட்டி

, இபிஎஸ் இடையே நடைபெற்று வருகிறது.

ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர்.

இடைக்கால பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார்.

பொதுக்குழுவை எதிர்த்து ஓபிஎஸ் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த தனி நீதிபதி அமர்வு பொதுக்குழு செல்லாது என உத்தரவிட்டது. தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் இரு நீதிபதிகள் அமர்வு கடந்த ஆகஸ்டு 25ஆம் தேதி விசாரித்தது. இந்த வழக்கில் கடந்த செப்டம்பர் 2-ந்தேதி அளித்த தீர்ப்பில், தனி நீதிபதி பிறப்பித்த தீர்ப்பை ரத்து செய்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம், பி.வைரமுத்து சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், சென்னை உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை உறுதிசெய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் இரு நீதிபதிகள் கடந்த செப்டம்பர் 2-ந்தேதி பிறப்பித்த உத்தரவில் அனைத்து அம்சங்களும் ஆராயப்படவில்லை என்றும், அதனை ரத்து செய்ய வேண்டும் என கோரப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இது தொடர்பான மேல்முறையீட்டு மனுக்களை உச்சநீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.

இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் வெவ்வேறு நிலைப்பாடுகளை எடுத்து வருவதால் யாருக்கு சாதகமாக முடியும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

இந்த வழக்கை உச்சநீதிமன்றத்தில் இன்று (ஜனவரி 4) பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் விசாரிக்கிறது. இதனால் அதிமுக வட்டாரத்தில் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.