எனது தந்தையின் முடிசூட்டு விழாவிற்கு செல்ல மாட்டேன்; இளவரசர் ஹாரி உறுதி.!

இங்கிலாந்து இளவரசர் ஹாரி, ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கரும், ஹாலிவுட் நடிகையுமான மேகன் மார்க்கல்லை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் இங்கிலாந்து அரச குடும்பத்தில் சேர்ந்து வாழ்ந்தனர். பின்னர் திடீரென இங்கிலாந்து அரச குடும்பத்தின் இளவரசர், இளவரசி பதவிகளிலிருந்து விலகுவதாக அறிவித்தனர்.

அரச குடும்பத்தில் இருந்து விலகுவது குறித்து, அமெரிக்காவின் புகழ்பெற்ற தொலைக்காட்சி தொகுப்பாளர் ஓபரா வின்ப்ரேவுக்கு இருவரும் பேட்டி அளித்தனர். அப்போது மேகன் மார்க்கல் கூறும்போது, “நான் கர்ப்பமாக இருந்தபோது, பிறக்கப்போகும் குழந்தையின் நிறம் எப்படி இருக்குமோ என அரச குடும்பத்தினர் கவலைப்பட்டனர். மேலும், பிறக்கும் குழந்தைக்கு அரச குடும்ப பாதுகாப்பு வழங்கப்படாது, இளவரசர் பட்டம் சூட்டப்படாது என்றெல்லாம் அரண்மனை வட்டாரத்தில் பேசப்பட்டது.

அரசு குடும்பத்தின் இந்த பேச்சால், தீவிர மன அழுத்தத்திற்கு ஆளானேன். இதனால் பலமுறை தற்கொலை செய்து கொள்ளலாமா என்றுகூட சிந்தித்து இருக்கிறேன். உளவியல் சிக்கல் இருப்பதாக அரச குடும்பத்தினரிடம் கூறினேன். ஆனால் அவர்கள், நீங்கள் அரச குடும்பத்தின் ஊழியர் அல்ல. எனவே உதவ முடியாது என்று கூறிவிட்டனர்” என கண்ணீர் மல்க தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து இளவரசர் ஹாரி கூறுகையில், “அந்த சமயத்தில், என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. நான் அரச குடும்பத்தில் சிக்கி கொண்டிருந்தேன் என்பது தெரியாமலேயே, மாட்டிக் கொண்டிருந்தேன். இப்போது, என் தந்தை, அண்ணன் வில்லியம்ஸ் சிக்கிக்கொண்டுள்ளனர். அரண்மனையை விட்டு வெளியேறிய பின்னர் எனது தந்தை, என்னிடம் பேசுவதையே நிறுத்தி விட்டார்” என தெரிவித்தார்.

இதையடுத்து, 2020ம் ஆண்டில் இருந்து அவர்களுக்கு அளித்து வந்த நிதி உதவியை பக்கிங்ஹாம் அரண்மனை நிறுத்தியது. இங்கிலாந்து அரச குடும்பத்தில் இன்வெறி பார்க்கப்படுவதாக இளவரசரே குற்றம் சாட்டி, அரச குடும்பத்தில் இருந்து விலகியது பரவலாக பேசப்பட்டது.

கடைசியாக, இங்கிலாந்து ராணி எலிசபெத் இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக ஹாரி-மேகன் தம்பதி இங்கிலாந்து வந்து சென்றனர்.

இந்த பின்னணியில், இளவரசர் ஹாரி ‘ஸ்பேர்’ என்ற தலைப்பில் தமது சுயசரிதையை எழுதியுள்ளார். இந்த புத்தகம் வருகிற 10ஆம் தேதி 16 மொழிகளில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹேரி அரச வாழ்க்கையிலிருந்து விலகியது ஏன்? எதற்காக அமெரிக்கா சென்றார்? என்பன உள்ளிட்ட கேள்விகளுக்கான பதில்கள் அந்தப் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், மேகனை திருமணம் செய்யும் விவகாரத்தில் தமது சகோதரர் வில்லியம்ஸ் தனது கழுத்தை பிடித்து தாக்கி தரையில் தள்ளியதாக இளவரசர் ஹாரி தனது சுயசரிதை புத்தகத்தில் எழுதியுள்ளதாக தி கார்டியன் செய்தி இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

“மேகன் மார்கெலை திருமணம் செய்து கொள்ள முயற்சித்தபோது, அதுதொடர்பாக எனக்கும், எனது சகோதரர் வில்லியமுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் அவர் எனது சட்டை காலரை பிடித்து, எனது கழுத்தில் இருந்த நெக்லசை பிய்த்து எறிந்தார். என்னை தரையிலும் தள்ளினார். இது அனைத்தும் மிக வேகமாக நடந்தேறியது” என அந்த புத்தகத்தில் ஹாரி கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

துறையினருடன் பெண்கள் வாக்குவாதம் காவல் துறையினர் தாக்க முற்பட்டதால் பரபரப்பு.

இந்தநிலையில் இங்கிலாந்து ராணி எலிசபெத் காலமானதைத் தொடர்ந்து, அரசர் சார்லஸின் முடிசூட்டு விழா நடக்க உள்ளது. இந்த முடிசூட்டு விழாவில் தான் பங்கேற்க மாட்டேன் என இளவரசர் ஹாரி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறும்போது, ‘‘உங்களுக்குத் தெரியும் முன்பும் இப்போது நிறைய நடந்துவிட்டது.

உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தை சுமூகமாக இருக்காது; சீன அதிபர் புடினுக்கு விளக்கம்.!

அந்த கதவுகள் எப்போது திறக்கப்பட்டுள்ளது. ஆனால் உண்மை என்பது நீதிமன்றத்தில் உள்ளது. நிறைய விஷயங்கள் விவாதிக்கப்பட வேண்டியவையாக உள்ளன. அவர்கள் இது குறித்து விவாதிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அமைதியாக இருப்பது எவ்வளவு நாளைக்கு உண்மையை வெளிகொண்டு வராமல் இருக்கும் என எனக்கு தெரியாது. எனது தந்தையின் முடிசூட்டு விழாவிற்கு செல்ல மாட்டேன்’’ என அவர் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.