தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டிய மாணவர்களை தோப்புக்கரணம் போட வைத்து திருச்சி போலீஸார் அறிவுரை வழங்கினர்.
திருச்சி மாநகரம் கல்லுக்குழி பகுதியில் காவல்துறை துணை ஆணையர் ஸ்ரீதேவி தலைமையில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போலீஸார், தலைக்கசவம் அணியாமலும், ஓட்டுநர் உரிமம் இல்லாமலும் இருசக்கர வாகனங்களை ஓட்டி வந்த பள்ளி, கல்லூரி மாணவர்களை பிடித்து அவர்களுக்கு தோப்புக்கரணம் போடும் நூதன தண்டனை வழங்கினர்.