“என்னைப் பொறுத்தவரை கி.மீ முக்கியமல்ல..!" – ராகுலின் ஜோடோ யாத்திரை குறித்து பிரசாந்த் கிஷோர்

கடந்த காலங்களில் பா.ஜ.க, திரிணாமுல் காங்கிரஸ், தி.மு.க, ஆம் ஆத்மி, ஐக்கிய ஜனதா தளம், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் தேர்தல் வியூகவாதியாகச் செயல்பட்டு கட்சிகளின் வெற்றியில் முக்கிய பங்காற்றியவர் பிரசாந்த் கிஷோர். இவர் தற்போது தன் தொழில்முறை தேர்தல் பணிகளிலிருந்து விலகி பீகார் மாநில அரசியலுக்குள் நேரடியாக இறங்கிவிட்டார்.

பிரசாந்த் கிஷோர்

அதன் ஒருபகுதியாகக் கடந்த அக்டோபர் முதல் பீகார் முழுவதும் பாதயாத்திரை மேற்கொண்டுவருகிறார். பாதயாத்திரையில் செல்லும் இடமெல்லாம் முதல்வர் நிதிஷ் குமாரைச் சாடிவரும் பிரசாந்த் கிஷோர், இவருக்கு முன்னதாகவே நாடு தழுவிய அளவில் பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டுவரும் ராகுல் காந்தியை மறைமுகமாக விமர்சித்திருக்கிறார்.

ராகுலின் யாத்திரை குறித்து மோதிஹாரியில் பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த பிரசாந்த் கிஷோர், “அவர்கள் பெரியவர்கள். அவர்களுடன் ஒப்பிடும்போது நான் ஒன்றுமே இல்லை. ராகுல் காந்தி 3,500 கி.மீ நடைப்பயணத்தில் இருக்கிறார். ஆனால், என்னைப் பொறுத்தவரை கி.மீ முக்கியமல்ல.

பிரசாந்த் கிஷோர் – ராகுல் காந்தி

அக்டோபர் முதல் நான் இடைவிடாமல் நடந்துவருகிறேன். இதை என் உடல் தகுதிக்குச் சான்றாகக் காட்டவிரும்பவில்லை. அதேசமயம் அடுத்த இலக்கை நோக்கிச் செல்லும் வழியில் குறுகிய சவாரி செய்வதையும் நான் ஏற்கவில்லை” என்று கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.